தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி – 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) – அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி – பச்சை மிளகாய் (சேர்த்து) – ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிது, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – கால் கிலோ.
செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.