தண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமானது தண்ணீர். ஆனால் அது இப்போதெல்லாம் போதுமான அளவுக்கு மக்களுக்கு கிடைப்பதில்லை. போதிய மழையின்மை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது.

தண்ணீரின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தி சொல்லக்கூடிய அளவுக்கு காலம் மாறிவிட்டது. தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு.

தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

* உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.

* உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராகும்.

* வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடனும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் தடுக்கப்படும்.

* விடியற்காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.

*3 வேளையும் சாப்பிடும் முன் தண்ணீர் அருந்துவது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.

* போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.

* தண்ணீர் அருந்துவது நல்லதுதான். அதற்காக தாகம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் கூடாது.

* அதிகமாக தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு மிகவும் அவசியம். நாம் அருந்தும் தண்ணீரை நன்கு காய்ச்சி மிதமாக சூட்டில் பருகுவது மிகவும் நன்மை தரும்.

Related Posts

Leave a Comment

Translate »