முகத்தில் பருக்களை அகற்றிய பின் அதன் தழும்புகள் போகாமல் அப்படியே இருக்கும். அவை கரும்புள்ளிகளாக மாறி முக அழகைக் கெடுத்துவிடும். இதை போக்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.
ரோஸ் வாட்டர் : முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
தக்காளி : தக்காளி சாறை பஞ்சில் முக்கி பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம்.
எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பிழிந்து பஞ்சில் முக்கி முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்க்கலாம்.
விட்டமின் E oil : விட்டமின் E ஆயில் கேப்சியூல் மெடிக்கல் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ தழும்புகள் நீங்கும்.
உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கு சாறை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கலாம்.