தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பொடி – 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நெல்லிக்காய் பொடி, இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் 1 கப்பாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்
குறிப்பு – நெல்லிக்காய் பொடிக்கு பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம்.