தேவையான பொருட்கள் :
பீட்ரூட் கீரை – 4 செடிகளின் இலைகள்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – பாதி
பச்சை மிளகாய் – 1
புளி – சிறு கோலி அளவு
பூண்டு – 7 எண்ணிக்கை
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு – 5
சீரகம்
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயம்
செய்முறை:
முற்றிய, பூச்சி இலைகளை நீக்கி விட்டு, மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடிய வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்துள் சேர்த்து தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிவை சேர்த்து வத்க்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் புளி, கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.
தாளித்தது, வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
இப்போது சுவையான, சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். துவையல் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.