இந்த ஆசனங்களை காலையில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

எந்த வேலையைத் தொடங்குவதற்கும் காலை வேலை என்பது சிறந்த தருணம். அந்த வகையில் மனதையும், உடலையும் சாந்தப்படுத்தும் யோகா பயிற்சியை தினசரி கடைபிடிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அப்படி காலையில் இந்த யோகாசனங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சூரிய நமஸ்காரம் : யோகாசனத்தில் முதலில் செய்யக் கூடியது இதுதான். மூச்சுப் பயிற்சிக்கு சிறந்தது. தரையில் படுத்தவாரு கைகளை தரையில் ஊன்றிக்கொள்ளுங்கள். கால்களை நீட்டிக்கொண்டு உடலை மட்டும் வலைத்து தலையை சற்று மேல் நோக்கியவாறு பார்க்க வேண்டும்.

விருக்‌ஷனா ஆசனம் : நேராக நின்றுக்கொள்ளுங்கள். தற்போது வலதுபுறக் காலை மட்டும் தூக்கி தொடையில் நேராக வைத்துக்கொள்ளுங்கள்.பின் இரு கைகளையும் தூக்கி தலைக்கு மேல் நிமிர்த்து விரல்களை கோர்த்துக்கொள்ளுங்கள். உடல் , தலை , கால் நேராக இருக்க வேண்டும். மூச்சை நன்கு இழுத்துவிட வேண்டும். பின் இதேபோல் மற்றொரு காலிலும் செய்ய வேண்டும்.

தடாசனம் : இரு கால்கலையும் நேராக வைத்து , முதுகையும் நேராக நிமிர்த்தி நில்லுங்கள். கைகளை விரித்தவாறு , உள்ளங்கை , மற்றும் விரலையும் நேராக நிமிர்த்தி நில்லுங்கள். அப்படியே 10 நிமிடங்கள் நின்று மூச்சை இழுத்துவிடுங்கள்.

மர்ஜாரி ஆசனம் : நேராக நில்லுங்கள். தற்போது முட்டிப்போட்டு உள்ளங்கைகளை தரையில் வைத்து ஊன்றுங்கள். பின் தலையையும் தரை நோக்கி பாருங்கள். உடல் முதுகுத் தண்டு எவ்வளவுக்கு எவ்வளவு நிமிர்ந்து வளைக்க முடியுமோ வளைந்து நில்லுங்கள்.

வஜ்ராசனம் : தரையில் அமர்ந்து இரு முட்டிகளையும் மடித்துக்கொண்டு அமருங்கள். இரு கைகளையும் முட்டியின் மேல் மையுங்கள். தலை நேராகவும், முதுகு நிமிர்ந்தவாரும் இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 நிமிடங்களுக்கு மூச்சை இழுத்துவிடுங்கள். 

Related Posts

Leave a Comment

Translate »