மழைக்காலம் என்றாலே சருமம் பொலிவிழந்து எண்ணெய் பிசுக்குடன் தோன்றும். இதனால் முகம் பளிச்சென இருக்காது. இதை தவிர்க்க வீட்டிலேயே ஸ்கிரப் செய்வது நல்லது. கிச்சன் பொருட்களை பயன்படுத்தி எப்படி ஸ்கிரப் செய்வது என்று பார்க்கலாம்.
காஃபி பொடி , தேங்காய் எண்ணெய் இரண்டையும் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக்கொண்டு நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து தேய்க்கவும். இதனால் எண்ணெய் பிசுக்கு நீங்கும். சருமத்திற்கும் பொலிவு கிடைக்கும்.
தேனுடன் சர்க்கரை கலந்து முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். முகம் ஃபிரெஷாகத் தோன்றும்
சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து தேய்த்தாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கும்
தக்காளியை பாதியாக நறுக்கி அதை சர்க்கரையில் தொட்டு அப்படியே முகத்தில் வைத்து தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதனால் முகம் எண்ணெய் இன்றி பளபளப்பாக காட்சியளிக்கும்.
இவை தவிர தினமும் 4 அல்லது 5 முறை முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.