தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – 2 கப்
பொடித்த வெல்லம் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். மூன்றுமுறை பிழிந்து பால் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
மூன்றாவதாக எடுத்த பாலுடன் வெல்லத்தை சேர்த்து வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய பாலுடன் இரண்டாவது முறை பிழிந்த பாலை சேர்த்து கொதிக்கவிடவும். அது கொதிக்க தொடங்கியதும் முதலில் பிழிந்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கவிடுங்கள். அது கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கி, பருகலாம்.
சத்தான ஆடிப்பால் ரெடி/