தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
அரைக்க வேண்டிய பொருட்கள்:
சோம்பு – அரை ஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – அரை கப்
இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தாளிக்க ::
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 2 கிராம்பு-2
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த, பின்னர் அதில் பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
உருளைக்கிழங்கு குருமா ரெடி.