samai-kanji_தேங்காய் பால் சேர்த்த சாமை காய்கறி கஞ்சி

தேங்காய் பால் சேர்த்த சாமை காய்கறி கஞ்சி

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்:

சாமை –  அரை கப்
பயத்தம் பருப்பு  –  அரை கப்
வெங்காயம் –  2
பச்சை மிளகாய்  –  2
கேரட், பீன்ஸ் –  1/4 கப்
இஞ்சி-பூண்டு விழுது –  1/2 டீஸ்பூன்
தேங்காய் பால்  –  100 மில்லி
மஞ்சள் தூள்  –  1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள்  –  1/2 டீஸ்பூன்
தனியாத்தூள்  –  1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு  –  1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்  –  தேவைக்கேற்ப

தாளிக்க –  பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு  –  சிறிதளவு

செய்முறை:

சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

பயத்தம் பருப்பை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியபின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு பயத்தம்பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான சாமை கஞ்சி தயார்.

Related Posts

Leave a Comment

Translate »