தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் – 10
மோர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
ப.மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
புதினா மற்றும் கறிவேப்பிலை பேஸ்ட் – 1/2 tsp
செய்முறை :
ப.மிளகாய், இஞ்சியை கொரகொரப்பாக தட்டிக்கொள்ளவும்.
பெரிய நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக கொட்டைகளை நீக்கி நறுக்கிக்கொள்ளுங்கள்.
பின் அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வடிகட்ட ஜூஸ் மட்டும் எடுத்து கொள்ளவும்.
தற்போது அந்த ஜூஸை மோருடன் கலந்துகொள்ளுங்கள்.
பின் அதனுடன் கொரகொரப்பாக தட்டிய ப.மிளகாய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை பேஸ்டை கலந்து , உப்பு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.
தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் போட்டு குடிக்கலாம்.
ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள். அளவுக்கு அதிகமாக குடித்தால் இதுவும் நஞ்சுதான்.