தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 200 கிராம்
தண்ணீர் – 150 மில்லி லிட்டர்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 30 கிராம்
துருவிய தேங்காய் – 150 கிராம்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்
வறுக்கப்பட்ட முந்திரி – தேவையான அளவு
உலர்ந்த திராட்சை – தேவையான அளவு
குங்குமப்பூ – சிறிதளவு
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். அத்துடன் உப்பு, ஒரு தேக்கரண்டி, குங்குமப்பூ மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.
ஒரு ஈரத்துணியால் இந்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.
எல்லாவற்றையும் நன்கு கலந்து அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும்.
கையில் எண்ணெய் தடவி கலந்து வைத்த மாவை எடுத்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
மாவை கையில் எடுத்து தட்டி அதில் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்த கலவையை வைத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வைத்து கொள்ளவும்.
மாவின் உள்ளே இந்த இனிப்பு கலவையை வைத்து அதன் ஓரத்தை மூடிவிட வேண்டும். இந்த மோதகம் காய்ந்து போகாமல் இருக்க ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
இட்லி தட்டில் வாழை இலைகளை வைத்து, பிடித்து வைத்த மோதகத்தை அதில் வைத்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும்.
சூப்பரான கேசரி மோதகம் தயார்.