தேவையான பொருட்கள்
வெண்ணெய் நீக்கிய தயிர் – 100
மில்லிகறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வெள்ளரிக்காய் – அரை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 200 மில்லி
செய்முறை:
கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வெண்ணெய் நீக்கிய தயிரில் தண்னீர் விட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
இதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, துருவிய வெள்ளரி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
சுவையான வெள்ளரி மோர் ரெடி. புளிக்கும் முன்பே சுவைக்கவும்.
குறிப்பு:
தண்ணீர் சேர்த்த தயிரை மிக்ஸியில் (அ) பிளன்டரில் நன்றாக அடித்துக் கொள்ளவும். மோர் உடலின் சூட்டைக் குறைக்கும். மோர் தயாரிக்கும் போது தயிர் ஆடையை அகற்றி விடவும். தயிர் ஆடையிலிருந்து வெண்ணெய் எடுக்கலாம்.