Elumbu-Kuzhambu-mutton-elumbu-sambar_செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்:
எலும்பு   – 250 கி

முருங்கைக்காய் – 1

து.பருப்பு – 50 கி

வெங்காயம்– 1

இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

தக்காளி – 2

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

தனியா தூள் –  4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு


அரைத்துக் கொள்ள:

தேங்காய் – 2 மேசைக்கரண்டி

கசகசா  – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி


தாளிக்க:
பிரியாணி இலை – 1

பட்டை – சிறிய துண்டு

கல் பாசி – சிறிது

சோம்பு – 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்   – 2

கறிவேப்பிலை – 1  கொத்து

நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி


செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து  3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும். 
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். 
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 
பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 
பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். 
பின்  மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.
புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.

Related Posts

Leave a Comment

Translate »