தேவையான பொருட்கள் :
சாமை அரிசி – 100 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
சீரகம் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 50 மில்லி
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு (மிளகு 8-10)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – ஒரு துண்டு
தண்ணீர் – 450 மில்லி.
முந்திரி – 3 (பொடித்துக்கொள்ளவும்)
செய்முறை:
நன்கு கழுவி சுத்தம் செய்த சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, குழைய வேகவைத்த அரிசியுடன் இதைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான சாமைப் பொங்கல் ரெடி.