தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
புளி – 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் – 6
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
பீர்க்கங்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய், புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!!!
பீர்க்கங்காய் சட்னியை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.