தேவையான பொருள்கள்:
தோசை மாவு – 2 கப்
பன்னீர் – ஒரு கப்
வெங்காயம் – 2
எண்ணெய்-தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மசாலா பொருள்கள்:
தனியா தூள்- 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா- 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள்- 2 ஸ்பூன்
செய்முறை:
பன்னீரை துருவி அல்லது சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பிறகு அதில் பன்னீர், தனியா தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவை சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் மசாலா ரெடி.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி அதன் மேல் பன்னீர் கிரேவி வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
பொன்னிறமாக மாறியவுடன் தோசையை ரோல் செய்வது போல் செய்தால் சுவையான பன்னீர் ஸ்டப்ஃடு தோசை தயார்..