தேவையான பொருட்கள்
அகத்தி கீரை- 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
பால் – 1கப்
உப்பு- 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
அகத்திக்கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
நீர் லேசாக சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
வெங்காயம், தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கட்டும்.
கீரை வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள்.
பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கிவிடலாம்.
அகத்திக்கீரை சொதி தயார்.
இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.