தேவையான பொருட்கள்
கொத்தமல்லி தழை – 1 கப்
புதினா – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 50 கிராம்
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 2
கடுகு – 1 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய அளவு
செய்முறை
கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கொத்தமல்லி தழை, புதினா, உப்பு, புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் வெல்லம் சேர்த்து கலந்து ஆறவிட்டு மிக்சியில் சிறிது நீர்விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பிறகு கடுகு தாளித்துக்கொட்டி பரிமாறவும்.
இந்த துலையலை சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். அல்லது மோர் சாதம், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.