தேவையான பொருட்கள்
இலந்தை பழம் – 1 கப்
வெல்லம் – கால் கப்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – சிறிதளவு
செய்முறை :
முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
பிறகு இலந்தைபழம், பெருங்காயம், உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் காய விடவும்.
அடுத்த நாள் அற்புதான ருசியில் இலந்தை அடை தயார்.
கைகளால் உரலில் இடித்து செய்தால் கூடுதல் ருசி கொண்ட பதார்த்தமாக இருக்கும்.