தேவையான பொருட்கள் :
சேமியா – 200 கிராம்
தேங்காய் துருவல் – அரை கப்
காய்ச்சிய பால் – 2 கப்
அரிசி மாவு – 4 டேபிள்ஸ்பூன்
பெ.வெங்காயம் – 4 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்)
கறிவேப்பிலை, கடுகு, எள் – சிறிதளவு
சீரகம், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து அரை மணி நேரம் பாலில் ஊற வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
நன்கு வதங்கியதும் வாணலியை இறக்கிவிட்டு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்னர் பாலில் ஊறிய சேமியா, அரிசி மாவு, எள், சீரகம், உப்பு ஆகியவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி நன்றாக மசித்துக்கொள்ளவும்.
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சேமியா கொழுக்கட்டை தயார்.