cradle-for-baby_சுட்டிக் குழந்தைகள் தூங்குவதற்கு ஏற்ற தூளி

சுட்டிக் குழந்தைகள் தூங்குவதற்கு ஏற்ற தூளி

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தையை 10 மாதங்கள் கருவில் சுமந்து பெற்ற அன்னைக்கும், குழந்தைக்கும் உள்ள தொடர்பு அறிவியலுக்கும் எட்டாதது. உணர்வுப்பூர்வமான அந்த தொடர்பு, அம்மா உபயோகப்படுத்திய பழைய பருத்தி சேலையில் கட்டப்பட்ட தூளியில் குழந்தை உறங்கும்போது உறுதிப்படுத்தப்படுகிறது.

குழந்தையின் முதல் உறவான அம்மாவின் வாசனையுடன் அந்த குழந்தை தூளியில் உறங்குவதால், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வை அது அடைவதில்லை.

தூளி, பிஞ்சு குழந்தையின் மென்மையான எலும்புகளுக்கு மெல்லிய அழுத்தத்தை அளிப்பதுடன், சீரான உடல் வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைகிறது. அதனால் உடலில் வலி ஏற்படாமல் குழந்தை உறங்கும்.

திரவ உணவுகளை மட்டுமே உண்ணும் பச்சிளம் குழந்தைகளுக்கு, தூளி அளிக்கும் சீரான, மெல்லிய அழுத்தத்துடன் கூடிய கதகதப்பான உடல் சமநிலை, உணவு செரித்தலுக்கு ஏற்றதாக இருக்கும். தூளியில் உறங்கும் குழந்தையின் முதுகெலும்பு நேர்கோட்டில் சீராக இருக்கும்.

தூளியில் இடப்பட்ட குழந்தை முன்னும் பின்னுமாக ஆட்டப்பட்டு உறங்க வைக்கப்படும்போது அம்மாவின் பாட்டு சத்தம் அதன் செவித்திறனை வளர்க்க உதவுகிறது. மேலும் அன்னையின் பனிக்குட நீரில் நீந்திய அனுபவம் பெற்ற குழந்தை தூளியில் அம்மாவை பார்த்தபடியே முன்னும் பின்னுமாக ஆடி அதே அனுபவத்தை பெறுகிறது.

அத்துடன் தனது முதல் உறவான அன்னையை பார்த்தபடியே தூங்கவும் முயற்சிக்கும். அது கண்களில் பார்வை திறன் நிலைத்தன்மையுடன் அமைவதற்கு ஏற்ற பயிற்சியாகவும் அமைகிறது.

தூளியில் உறங்கும் குழந்தைகளுக்கு வெளிப்புற வெளிச்சம் காரணமாக கண்கள் கூசுவதில்லை. வெளியில் ஒளிரும் மின்விளக்கின் வெளிச்சம் தூளிக்குள் விழுவதில்லை. தூளிக்குள் உள்ள நிழல் குழந்தையின் அமைதியான உறக்கத்துக்கு ஏற்றதாக அமைகிறது.

Related Posts

Leave a Comment

Translate »