கவலைகள் மறைய புதிய மனிதராய் மாற்றும் தத்துவங்கள்

புதிய மனிதராய் மாற்றும் தத்துவங்கள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

1.  தவறே செய்யாத மனிதன் இல்லை, தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை.

2. வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்.

3.  மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும், பிறர் செய்த தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்க விரும்புகிறான்.

4. அறிவாளிகளுக்கு அறிவு அதிகம், ஆனால் முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.

5.  தலைகுனிந்து என்னைப் பார், தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன். – புத்தகம்.

6. அழும்போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி; கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

7.  நல்லவனாய் இரு. ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே. அதை விட முட்டாள்தனமான விஷயம் எதுவுமில்லை.

8.  வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே. உன் நிழல்கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.

9.  அனைவரையும் நேசி, சிலரை மட்டும் நம்பு, ஒருவரை பின்பற்று, ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்து கற்றுக்கொள்.

10.  இருளைத் தூற்றுவதற்குப் பதில் அகலை ஏற்றுங்கள்.

11. வீரனைப் போரிலும், யோக்கியனை கடனிலும், மனைவியை வறுமையிலும், நண்பனை கஷ்டகாலத்திலும் அறிந்துகொள்ளலாம்.

12.  பழைமைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

13.  வாழப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும்.

14.  பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும்போதுதான் தெரியும்.

15. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரமாக செல்வந்தனாவான்.

16.  கீழே விழாமல் இருப்பது பெருமையில்லை, விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை.

17.  என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர், அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள் –  எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?

18. இதயத்தால் காதல் கொள், கண்களால் அல்ல.

19.  எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும், மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.

20.  உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.

21. துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே, காதலே நினைத்து வாழ்க்கையை இழக்காதே, சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே, தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே.

22. நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்,

ஏழ்மையிலும் நேர்மை.

கோபத்திலும் பொறுமை.

தோல்வியிலும் விடாமுயற்சி.

வறுமையிலும் உதவி செய்யும் மனம்.

துன்பத்திலும் துணிவு.

செல்வத்திலும் எளிமை.

பதவியிலும் பணிவு.

23. வாழ்க்கையில் பெறவேண்டிய பதினாறு பேறுகள்,

புகழ்.

கல்வி.

வலிமை.

வெற்றி.

நன்மக்கள்.

பொன்.

நெல்.

நல்விதி.

நுகர்ச்சி.

அறிவு.

அழகு.

பெருமை.

இனிமை.

துணிவு.

நோயின்மை.

நீண்ட ஆயுள்.

24.

 மனதில் உறுதி வேண்டும்,

வாக்கினிலே இனிமை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்,

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியேலே பெருமை வேண்டும்,

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தில் உறுதி வேண்டும்,

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானமிங்கு தென்பட வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்.

– பாரதியார்.

25.  எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள். – காந்திஜி.

26.  துன்பங்ளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன. – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

27.  அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான். – அன்னை தெரசா.

28.  விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும், மன்னிப்பு கொடுங்கள் தவறுகள் குறையும், மனம் விட்டு பேசுங்கள் அன்பு அதிகமாகும். – அன்னை தெரேசா.

29. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். – ஆபிரகாம் லிங்கன்.

30.  உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும், உன் செயல்ளுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். – சாக்ரடீஸ்.

31.  மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை. – சாக்ரடீஸ்.

32.  கண்ணாடி தான் என் சிறந்த நண்பர். ஏனெனில், நான் அழும்போது அது ஒருபோதும் சிரித்ததில்லை. – சார்லி சாப்ளின்.

33.  உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை. – சார்லி சாப்ளின்.

34.  நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது, நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது, நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது. – கன்ஃபூஷியஸ்.

35.  நமக்கு நெருக்கமானோர் நம்முடன் பேசாதபோது ஏற்படும் வலியைவிட, அவர்கள் மற்றவருடன் நெருக்கமாக பேசும்போது ஏற்புடும் வலி அதிகம்.

36.  கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது, சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது, ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.

37. சந்தோசத்த தான் நம்ம சுத்தி இருக்குற எல்லாருகிட்டயும் பகிர்ந்துக்கணும். கஷ்டம்னு வந்தா தனியா நின்னு ஜெயிக்கிறவன் தான் மனுஷன்.

38.  வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்கக் கூடாது. விரும்பி எது வந்தாலும் “TAKE CARE”, விலகி எது போனாலும் “DON’T CARE”.

39.  இன்பத்தை “INBOX” இல் வை, கவலையை “OUTBOX” இல் வை, புன்னகையை “SENT” பண்ணு, கோபத்தை “DELETE” பண்ணு, மனதை “VIBRATE” செய்து பார், வாழ்க்கை தானா “RINGTONE” ஆக மாறும்.

கவலைகளை மறப்போம் புதிய மனிதர்களாய் மாறுவோம்.

Related Posts

Leave a Comment

Translate »